தமிழகத்தில் இன்று
லட்-சக்க-ணக்-கா-ன பக்-தர்-கள் கண்-டு- களித்-த பூரி தேர்த் திருவிழா
பூரி:
ஒரிஸா மாநிலம் பூரியில் உள்ள ஸ்ரீஜகந்நாதர் ஆலயத் தேர்த் திருவிழா திங்கள்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.
இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்த லட்சகணக்கான பக்தர்கள் இவ் விழாவில் கலந்து கொண்டு தேரின் வடத்தைப் பிடித்துஇழுத்தனர்.
இந்த நூற்றாண்டின் முதல் தேர்த்திருவிழா என்பதால் இவ்விழாவில் முந்தைய ஆண்டுகளை விட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜகந்நாதர் ஆலயத்தில் பூஜிக்கப்பட்டு வரும் ஜகந்நாதர் அவரது சகோதரர் பாலவத்ரா, சகோதரி தேவி சுபத்ரா ஆகியோரது சிலைகள் ஒன்றன்பின்ஒன்றாக கோயிலில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு தேர்களில் வைக்கப்பட்டன.
பின்னர் பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிஷ்சாலந்தா சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார். அதற்குப் பிறகு ஜகந்நாதரின் தேர் முன்னே செல்ல பின்தொடர்ந்த மற்ற இரு தேர்களும் ஊர்வலமாகச் சென்றன.
கோயிலுக்கு முன்னே உள்ள சுமார் 3 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையில் பக்தர்கள் குழுமியிருந்து தேர்களில் பவனி வந்த கடவுளர்களைத் தரிசித்தனர். சாலையின்இரு பக்கமும் இருந்த கட்டடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தைக் கண்டுகளித்தனர்.
தேரோட்டத்தை ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்கள் பலர் கண்டுகளித்தனர்.
யு.என்.ஐ.