தமிழகத்தில் இன்று
தூக்குக் கயிற்றை முத்தமிடத் தயார் ....முழங்குகிறார் நவாஸ்
இஸ்லாமாபாத்:
செய்யாத தவறுக்கு ராணுவ ஆட்சியிடம் மன்னிப்பு கேட்பதை விட தூக்குக் கயிற்றைமுத்தமிடத் தயார் என்று சிறை வாசம் அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள்பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் செய்ததாக கூறி நவாஸ் ஷெரீப் மீது வழக்கு நடந்துவருகிறது. இதுதொடர்பாக இஸ்லாமாபாத் நகரிலுள்ள அட்டாக் கோட்டைநீதிமன்றத்தில் அவர் புதன்கிழமை ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு வெளியே வந்தஅவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை ஒழித்துக் கட்டும் விதத்திலேயேஇந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர்களின் முயற்சிக்கு நான் பணிய மாட்டேன்.
இரண்டு முறை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை கை விலங்கிட்டுநீதிமன்றத்திற்கு அழைத்து வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.கைவிலங்கோடுதான் காலை பிரார்த்தனை செய்ய என்னை சிறை நிர்வாகத்தினர்அனுமதிக்கின்றனர் என்றார் ஷெரீப்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications