பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
பாலஸ்தீனம்: பிரிட்டிஷ், பிரான்ஸ் ஆதரவு கோருகிறது இஸ்ரேல்
லண்டன்:
பாலஸ்தீன விவகாரத்தில் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஆதரவை இஸ்ரேல் பிரதமர் ஈத் பாரக் கோரியுள்ளார்.
லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களுக்குத் திடீர் பயணம் மேற்கொண்ட அவர், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், வெளியுறவுத் துறைச் செயலர் ராபின் குக்ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு பிரான்ஸ் சென்ற அவர், அந் நாட்டு அதிபர் ஜாக்ஸ் சிராக்கைச் சந்தித்துப் பேசினார்.
பாலஸ்தீன விவகாரம் குறித்து இறுதி முடிவு காண்பதற்காக அடுத்த சில தினங்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத்துக்கும்,இஸ்ரேலுக்கும் இடையே செப்டம்பர் 13-ம் தேதி பேச்சு நடைபெற உள்ளது. பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவைஇஸ்ரேல் கோரியுள்ளது.
அதன் ஒரு கட்டமாக இஸ்ரேல் பிரதமர் ஈத் பாரக், நேரடியாக பிரிட்டனுக்கும், பிரானுக்கும் வந்து அந் நாட்டுத் தலைவர்களின் ஆதரவைக்கேட்டுள்ளார். அது தவிர, கடந்த ஆண்டு பாலஸ்தீனம் என்று தனிநாட்டை பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் அறிவித்தார்.அராபத்தின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ளவேண்டாம் என்றும் பாரக் கேட்டுக் கொண்டுள்ளார்.