பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
நளினி - முருகன் உருக்கமான சந்திப்பு
வேலூர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினியும் தூக்குதண்டனை அளிக்கப்பட்ட அவரது கணவர் முருகனும்செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு மிகவும் உருக்கமாக இருந்தது. கணவரின் தூக்குத் தண்டனைமாற்றப்படாதது குறித்து நளினி வருத்தம் தெரிவித்தார்.
நளினிக்கும் முதலில் தூக்கு தண்டனைதான் வழங்கப்பட்டது. அவருக்கு பெண்குழந்தை இருப்பதால் கருணை அடிப்படையில் அவரது தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது, ஆனால் அவரது கணவர் முருகன் மற்றும் சாந்தன்,பேரரளிவாளன் ஆகியோரது தண்டனை இதுவரை குறைக்கப்படவில்லை.
முருகனும் நளினியும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து பேசஅனுமதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கான பகுதியில் நளினியும் ஆண்களுக்கானபகுதியில் முருகனும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகனும், நளினியும்செவ்வாய்க்கிழமையன்று பலத்த பாதுகாப்புக்கிடையே சந்தித்துக் கொண்டனர்.
முருகனைப் பார்த்து உங்கள் தண்டனையைக் குறைக்கப்படுவதற்காக வேப்பமரத்தைதினமும் 108 முறை சுற்றி வந்து பிரார்த்தனை செய்து வந்தேன். இது வரை தண்டனைகுறைக்கப்படவில்லை. எனவே இனிமேல் வேப்பமரத்தை சுற்றப்போவதில்லை எனகண்ணீருடன் கூறினார். முருகன் இறைவனே வந்தாலும் என்னைக் காப்பாற்ற முடியாதுஎன்று கண்ணீருடன் நளியினிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications