பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
ஜெயலலிதா ஒரு மகாலட்சுமி ... புகழ்கிறார் ராதாரவி
சென்னை:
ஜெயலலிதா ஒரு மகாலட்சுமி. அவர் ஆட்சியில் பணம் மழையாக பொழிந்தது.ஆனால், இப்போது ஐந்து ரூபாய் நோட்டு எட்டு துண்டாக கிழிந்து விட்டது என்றுநடிகர் ராதாரவி தெரிவித்தார்.
தி.மு.க., ம.தி.மு.க. என்று அரசியலில் ஒரு சுற்று அடித்து விட்டு, இப்போதுஅதிமுகவில் ஐக்கியமாகி இருப்பவர் ராதாரவி. அதிமுகவில் சேர்ந்த நாள் முதல் ஊர்ஊராகச் சென்று ஜெயலலிதாவை புகழ்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவருக்கும்,இவருடன் கட்சியில் இணைந்த நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரனுக்கும் இதுதான்ஜெயலலிதா கொடுத்தள்ள வேலை.
இப்பணியை செவ்வனே செய்து வரும் ராதாரவி
நாமகிரிப்பேட்டை என்ற ஊரில் பேசியதாவது: ஜெயலலிதா ஒரு மகாலட்சுமி.மகாலட்சுமி என்றால் கடவுள் மகாலட்சுமி. நிறைய பணம் கிடைக்க வேண்டும் என்றுமகாலட்சுமியை வேண்டுகிறோமே அந்த மகாலட்சுமி.
அவரது ஆட்சியில் பணப் புழக்கம் எப்படி இருந்தது. இப்போதுள்ள மாதிரியாஇருந்தது. பண மழையே பெய்தது. பொதுமக்களிடம் பணத்துக்கு தட்டுப்பாடேஇல்லையே. ரூபாய் நோட்டுக்கும் பஞ்சம் கிடையாது. எல்லாம் புது நோட்டுக்களாககிடைத்தன.
ஜெயலலிதா ஆட்சியில் ரூபாய் நோட்டு லேசா அழுக்காகி இருந்தால் கூடடீக்கடையில் வாங்க மாட்டார்கள். செல்லாது என்று கூறி விடுவார்கள்.
ஆனா, திமுக ஆட்சியில் அப்படியா இருக்கிறது? 5 ரூபாய் நோட்டு 8 துண்டாககிழிந்து போய் இருக்கிறது. அதையும் 12 ஒட்டு போட்டு ஒட்டி வைச்சிருக்கோம்.டீக்கடையில் கொடுத்தால் கிடைத்தால் போதும் என்று வாங்கிக் கொள்கிறார்கள்.
திமுக ஆட்சியில் பணப் புழக்கமே இல்லை என்பதற்கு இதுவே உதாரணம் என்றார்ராதாரவி.












Click it and Unblock the Notifications