பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது

Subscribe to Oneindia Tamil

10 ஆண்டுகளில் அனைத்து இந்திய மொழிகளிலும் சாப்ட்வேர்: வாஜ்பாய்

சென்னை:

இந்தியாவில் இன்னும் பத்து ஆண்டுகளில் அனைத்து மொழிகளுக்கும் சாப்ட்வேர்தயாரிக்கப்பட்டு விடும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.

சென்னை தரமணியில் தமிழக அரசின் சார்பில்ரூ. 338 கோடி மதிப்பில் டைடல் பார்க்அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரியதாக கருதப்படும் இதை பிரதமர்வாஜ்பாய் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் வாஜ்பாய் பேசுகையில், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் இந்த டைடல்பார்க் ஒரு மைல்கல். இதற்கு முன்பு ஹைதராபாத், பெங்களூர், மும்பை, புனே,கல்கத்தா என பல நகரங்களில் சாப்ட்வேர் பூங்காக்களைத் திறந்து வைத்துள்ளேன்.இவையெல்லாம் நவீன இந்தியாவின் அடையாளங்கள்.

மகாகவி பாரதியார் பல ஆண்டுகளுக்கு முன்பே நவீன இந்தியா குறித்து கனவகண்டிருந்தார். அவை அனைத்தும் இப்போது ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா இன்று முன்னணியில் உள்ளது. பல்வேறு மாநிலஅரசுகளும் தங்கள் மாநிலங்களில் தகவல் தொழில்நுட்பத் திட்டங்களைப் போட்டிபோட்டி அமல்படுத்தி வருகின்றன இத்தகைய நேரத்தில் அனைத்து மாநில அரசுகளும்ஒருங்கிணைந்து செயல்பட்டால் இன்னும் வேகமான வளர்ச்சியைக் காண முடியும்.

இதுபோன்ற டைடல் பார்க்குகள் நாடு முழுவதிலும் உருவாக வேண்டும். சர்வதேசஅளவில் தகவல் தொழில் நுட்பத் துறையில் விரைவில் இந்தியா முதன்மை பெறும்.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை நகர்ப்புற மக்கள் மட்டுமல்லாது, கிராமப்புற மக்களும்பயன்படுத்த வேண்டும். இதற்காக அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ளஅனைத்து மொழிகளிலும் சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு விடும். இதன் மூலம்விவசாயிகள் முதல் கல்வியறிவு பெற்றவர்கள் வரை கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின்பயனை முழுமையாக நுகர முடியும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+