தமிழகத்தில் இன்று
யு.ஏ.இ. செல்ல இந்தியர்களுக்கு இனி சுற்றுலா விசா இல்லை
துபாய்:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஏமன் நாட்டவர்களுக்கு சுற்றுலா விசா தருவதை ஐக்கிய அரபு நாடுகள் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நாடுகளைச் சேர்ந்த பலர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு,சுற்றுலா விசா மூலம் வந்த பின்பு தலைமறைவாகி விடுவதால் தற்போதைக்கு சுற்றுலாவிசா தருவதை நிறுத்தி வைப்பதாக ஐக்கியஅரபு நாடுகள் கூறியுள்ளது.
இதுதொடர்பாக கல்ப் டுடே பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எமிரேட் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இனிமேல் இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை மற்றும் ஏமன் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா தரப்பட மாட்டாது என்றார்.
இருப்பினும் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்க துபாய் குடியேற்றத் துறை அகிகாரிகள் மறுத்து விட்டனர்.
ஐக்கியஅரபு நாடுகளுக்கு வரும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்களுக்கு அதிக அளவில் சுற்றுலா விசா பெற்றுத் தருவது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்என்பது குறிப்பிடத்தக்கது.
2000 பேர் வந்தால் அவர்களில் 200 பேர் தலைமறைவாகி விடுவதாக கல்ப் ஏர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications