பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிடாது வாஜ்பாய்
சென்னை:
இலங்கைப் பிரச்னையில் இந்தியா எந்த விதத்திலும் தலையிடாது என்று சென்னையில்பிரதமர் வாஜ்பாய் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இலங்கைப் பிரச்னை தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்குஇடையில் ஏற்பட்டுள்ள பிரச்னை ஒன்றும் பெரிதல்ல. அதை பேசித் தீர்த்துக்கொள்வோம் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் வாஜ்பாய் புதன் கிழமை காலைதிருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை நாட்டுக்குஅர்ப்பணிப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: இலங்கை பிரச்னையில் இந்தியா தலையிடாது என்ற முடிவில் ஏதாவதுமாற்றம் உண்டா? இலங்கை அரசுக்கு தெரியாமல் விடுதலைப் புலிகளுக்கு இந்தியாஉதவ வேண்டும் என்று புலிகள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறதே?
பதில்: இலங்கைப் பிரச்னையில் இந்தியா எந்த விதத்திலும் தலையிடாது. இந்நிலையில்எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தமிழக தலைவர்கள் சிலர்விடுதலைப் புலிகளுக்கு உதவ வேண்டும் என்று பேசி வருகிறார்களே...?
பதில்: அதுபற்றி எனக்குத் தெரியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தமிழகதலைவர்களுடன் இலங்கைப் பிரச்னை குறித்து ஏற்கனவே பேசியுள்ளோம்.இவ்விஷயத்தில் எந்த பிரச்னை வந்தாலும் நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம்.
கேள்வி: காஷ்மீரில் இருந்து சுயாட்சிக் கோரிக்கை எழும்பியுள்ளதே...?
பதில்: அது முடியாது. 1953ல் இருந்ததுபோல் காஷ்மீரில் அதிகாரங்கள் கேட்கின்றனர்.அது முடியாது என்று கூறி விட்டோம். அதற்காக மாநிலங்களுக்கு அதிகாரமே தரக்கூடாது என்பதல்ல எங்கள் நிலை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைத்திட்டமே, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்பது தான்.அதை நாங்கள் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.
கேள்வி: காஷ்மீரின் சுயாட்சி தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிராகரித்து விட்டது.அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? மீண்டும் அது நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்குஎடுத்துக் கொள்ளப்படுமா?
பதில்: அப்படி எந்த திட்டமும் இல்லை. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் யாராவதுகிளப்பினால் விவாதிப்பது பற்றி பரிசீலிக்கலாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் காஷ்மீர் தொடர்பாக எந்தக் குழப்பமும் இல்லை.எங்கள் கூட்டணியில்தான் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சிநீடிக்கிறது. கூட்டணியில் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து பரூக் அப்துல்லாதான்முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பிரதமரை, தமிழக முதல்வர் கருணாநிதி,மத்திய, மாநில அமைச்சர்கள் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். பிரதமருடன்மதிமுக தலைவர் வைகோவும் அதே விமானத்தில் மதுரை சென்றார்.
காலை 10.20 மணிக்கு அவர் விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்துஹெலிகாப்டர் மூலம் கயத்தாறு சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதுரை வழியாக டெல்லி திரும்பினார்.












Click it and Unblock the Notifications