தமிழகத்தில் இன்று
பாக். மீதான ஆயுத சப்ளை தடையை நீக்கியது இங்கிலாந்து
லண்டன்:
பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்க விதித்திருந்த தடையை இங்கிலாந்து அரசு நீக்கியுள்ளது.
கடந்தஆண்டு பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி நடந்ததையடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்வதற்கு இங்கிலாந்து அரசு தடை விதித்தது. இந்த நிலையில்புதிதாக ஆயுத சப்ளை தொடர்பான பல விண்ணப்பங்களை இங்கிலாந்து அரசு பரிசீலித்து ஒப்புதல் தந்திருப்பதாக கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஆயுத சப்ளை தொடர்பான தடையை நீக்கியிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ராபின் குக் கூறியிருப்பதாகவும் கார்டியன் செய்தியில்வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ராபின் குக் நாடாளுமன்றத்தில் பேசுகையில், பாகிஸ்தானின் தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஆயுத சப்ளை தொடர்பானவிண்ணப்பங்களை பரிசீலீப்பதற்கு தீர யோசிப்போம் என்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி புரட்சிக்குப் பிறகு மொத்தம் 46 விண்ணப்பங்களை இங்கிலாந்து அரசு நிறுத்தி வைத்தது. அவற்றில் தற்போது 20விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications