தமிழகத்தில் இன்று
இன்சூரன்ஸ் சேவையில் நுழைகிறது பஞ்சாப் நேஷனல் வங்கி
சண்டீகர்:
இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கார்டு சேவையில் நுழைய பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எஸ்.எஸ். கோலி கூறியதாவது:
இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிக் கார்டு சேவையில் ஈடுபட பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டுக் கூட்டு நிறுவனத்துடனும்,கிரெடிட் கார்டு சேவையில் முன்னணியில் உள்ள நிறுவனத்துடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான நடைமுறைப் பணிகள் முடிக்கப்படும்.
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரெடிட் கார்டு சேவையைைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டால் வங்கியின்வாடிக்கையாளர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விரைவில் எலக்ட்ரானிக் பேங்கிங் சேவையிலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குஇந்த கிரெடிட் கார்டு அறிமுகம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.
ஏற்கெனவே, ஏடிஎம் வசதியை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பஞ்சாப் நேஷனல் வங்கி உருவாக்கியுள்ளது. மற்ற நகரங்களிலும் இந்த வசதிவிரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு சேவை அறிமுகப்படுத்தப்பட்டால், ஏடிஎம் கிளைகளிலேயே கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வெளிநாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து இன்சூரன்ஸ் சேவையிலும் ஈடுபட பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பணிகள் ஏற்கெனவேதொடங்கப்பட்டுவிட்டன. இன்சூரன்ஸ் சேவை குறித்து இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை வளர்ச்சி அமைப்பு தனது இறுதி முடிவை வெளியிட்ட பிறகு முழு வீச்சில் இப் பணியில்வங்கி ஈடுபடும்.
நாடு முழுவதும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 3853 கிளைகளும், 383 விரிவாக்கக் கிளைகளும் உள்ளன. இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள்அறிமுகப்படுத்தப்பட்டால், வங்கியின் சேவை மேலும் விரிவடையும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பானநடைமுறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் கோலி.
யு.என்.ஐ.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications