இலங்கைக்கு இரண்டாவது வெற்றி
கல்லே:
சிங்கர் கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை தனது இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது.
கல்லேயில் வியாழக்கிழமை நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இலங்கையை பேட் செய்ய அனுப்பியது. 50 ஓவரில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.சங்காக்கரா 84 ரன்களும், ரஸல் அர்னால்டு 60 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.2 ஓவரில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில்இலங்கை வெற்றி பெற்றது. ஹால் 81 ரன்களும், கிர்ஸ்டன் 59 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை அணியில் உபல் சந்தனா 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகராக இலங்கையின் சங்காக்கரா தேர்வு செய்யப்பட்டார்.
புதன்கிழமை நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப் போட்டித் தொடரின் அடுத்த ஆட்டம் பாகிஸ்தானுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே கொழும்பில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications