தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கடலில் தத்தளித்த 16 இந்தோனேசியர்களை மீட்ட மலேசியக் கடற்படை வீரர்கள்
கோலாலம்பூர்:
தெற்கு சீன கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இந்தோனேசியக் கப்பலிருந்து 16 ஊழியர்கள் மற்றும் பயணிகளை மலேசியக் கப்பல் படைப் படகு மீட்டது.
அரிசி மற்றும் சர்க்கரை ஆகியவற்றை ஏற்றி வந்த அந்தக் கப்பல் கோலாலம்பூர் அருகே ககாரா என்ற இடத்தில் கடலில் மூழ்கத் துவங்கியது.புயல் காரணமாக கப்பல் மூழ்கியது. இந்தோனேசியாவின் பின்டன் தீவிலிருந்து, அனம்பாஸ் தீவுக்கு அந்தக் கப்பல் சென்று கொண்டிருந்தது.
கப்பலில் இருந்த ஊழியர்களும், பயணிகளும் உயிர் காக்கும் படகு மூலம் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இருப்பினும் புயல் மற்றும் கடல்கொந்தளிப்பு காரணமாக அவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைப் பார்த்த மலேசியக் கடற்படை வீரர்கள், அனைவரையும் மீட்டுகரைக்குக் கொண்டு வந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications