தமிழகத்தில் இன்று
அரசுப் பள்ளிகளுக்கு ரஜினி ரூ. 25 லட்சம் நாற்காலிகள் நன்கொடை
சென்னை:
ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவசப் பாடப் புத்தகம் வழங்கிவரும் நடிகர் ரஜினி காந்த், இந்த ஆண்டு முதல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில்உள்ள 30 அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் அமர பெஞ்ச், டெஸ்க் இலவசமாகதரவிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆண்டு தோறும் ஏழை மாணவ மாணவிகள் படிக்க ரூ. 30 லட்சரூபாய் செலவில் இலவச நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து வருகிறார்.
இந்த ஆண்டு முதல் பிளஸ் -1 பிளஸ் -2 படிக்கும் ஏழை மாணவ - மாணவிகளுக்குபாடப்புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் வழங்குவதுடன் தமிழ்நாடு மற்றும்பாண்டிச்சேரியில், மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற வகையில் 30 அரசு பள்ளிகளுக்குரூ. 25 லட்ச ரூபாய் செலவில் ஒரு பள்ளிக்கு 40 செட் பெஞ்ச், டெஸ்குகள் வழங்கரஜினி முடிவு செய்துள்ளார்.
இதன் துவக்க விழா மேற்கு மாம்பலம் புதூர் அரசு மேல் நிலையப்பள்ளியில்நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் சார்பில் அவரது ரசிகர் மன்ற தலைவர்சத்தியநாராயணா கலந்து கொண்டார். அவர் பள்ளி தலைமை ஆசிரியை மனோரஞ்சிதத்திடம் 40 செட் பெஞ்ச் டெஸ்குகளை வழங்கினார். ஒரு பெஞ்சுக்கு 5 பேர்வீதம் 200 குழந்தைகள் உட்கார்ந்து படிக்கலாம்.