யோகம் பயிலுவோம்
ரஷியா வழங்கும் சுகோய் போர் விமானங்களில் நவீன என்ஜின்கள்
மாஸ்கோ:
ரஷியாவிடமிருந்து இந்தியா வாங்கவுள்ள சுகோய் -30 வகை போர் விமானங்களில்,உலகிலுள்ள போர் விமானங்கள் எதிலும் இல்லாத அதி நவீன என்ஜின்பொருத்தப்படவுள்ளது.
சுகோய் விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் மிகயீல்போகோசின் கூறுகையில், இந்தியாவுக்கு சுகோய் -30 எம்.கே.ஐ. ரக போர்விமானங்கள் 50 வழங்கப்படும். இவற்றில் ரஷியாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீனஏ.எல்-31எப்பி ரக என்ஜின்கள் பொருத்தப்படும். இந்த வகை என்ஜின்கள்உலகிலுள்ள வேறு எந்த போர் விமானத்திலும் இல்லை.
இந்தியாவிற்கு ஏற்கனவே 18 சுகோய் போர் விமானங்களை ரஷியா வழங்கியுள்ளது.
2003-ம் ஆண்டுக்குள் 30 போர் விமானங்களும், அதற்கான உதிரி பாகங்கள்,பராமரிப்புக் கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டு விடும்.
பராமரிப்புக்காக இந்தியா வழங்கியுள்ள மிக்-21 ரக விமானங்களின் ஒரு பகுதிவிரைவில் சீர்படுத்தப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த கட்டமாக 123மிக் விமானங்கள் இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில்மேற்கொள்ளப்படும் என்றார்.
இதற்கிடையே, ரஷியாவின் விமானம் தாங்கிக் கப்பலான அட்மிரல் கோர்ஸ்கோவ்,இந்தியாவிடம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அக்டோபரில் ரஷிய அதிபர்புடின் இந்தியா வரும்போது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலை இலவசமாக தர ரஷியா முன்வந்துள்ளது. இருப்பினும் கப்பலை சரிசெய்வது மற்றும் புதுப்பிப்பது போன்றவற்றிற்கான செலவுகளை இந்தியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications