வளர்ச்சி குழுவில் பி.டி.உஷா: இனியாவது "ஓடுமா" விளையாட்டுத்துறை?
டெல்லி:
இந்தியாவில் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் தேசிய விளையாட்டு வளர்ச்சி நிதி கவுன்சிலை மத்திய அரசுஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்களாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுககுப் பெருமை சேர்த்த பி.டி.உஷா, பர்கத் சிங், பிஷன்சிங் பேடி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை விட மிகச் சிறிய நாடுகள் எல்லாம் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம்பதக்கங்களைக் குவித்து வருகின்றன. ஆனால் நிலப் பரப்பில் பெரியதும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்டநாடுகளில் இரண்டாம் இடமும் வகிக்கும் இந்தியா, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க அளவில்பதக்கங்களைப் பெறவில்லை.
பி.டி. உஷா, குஞ்சராணி, ஜஸ்பால் ராணா, பர்கத் சிங், விஸ்வநாதன் ஆனந்த், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி போன்றவர்கள்தனிப்பட்ட முறையில் காட்டிய ஆர்வம் மற்றும் ஈடுபாட்டால் அவர்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றனர்.
அந்த வகையில் இந்தியாவுக்கு விளையாட்டு உலகில் சர்வதேச அளவில் புகழ் சேர்த்த வீரர் மற்றும் வீராங்கனைகளைஉறுப்பினர்களாகக் கொண்டு தேசிய விளையாட்டு வளர்ச்சி நிதி கவுன்சிலை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இக் கவுன்சிலுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தீன்ஷா தலைவராகவும், மத்திய விளையாட்டுத் துறைஇணை அமைச்சர் ஷானவாஸ் உசேன் துணைத் தலைவராகவும் இருப்பர்.
மொத்தம் 19 பேர் கொண்ட இக் கவுன்சிலில் தொழிலதிபர் ராகுல் பஜாஜ், பஞ்சாப் நேஷனல் வங்கித் தலைவர் எஸ்.எஸ்.கோலி, இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எம்.ஏ. பத்தான், ஹட்கோ தலைவர் வி. சுரேஷ், பி.டி. உஷா, பிஷன் சிங் பேடி, பர்கத்சிங், குஞ்சராணி, ரந்தீர் சிங், தோய்பா சிங், ஜொகீந்தர் சிங் செய்னி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, அரசு அதிகாரிகளைக் கொண்ட செயற்குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் கொண்ட இந்த செயற்குழுவில் ஒரேவிளையாட்டுத் துறையைச் சேர்ந்த நபராக பி.டி.உஷா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த செயற்குழுவுக்கு விளையாட்டுத் துறைச் செயலர்என்.என். கன்னா தலைவராக இருப்பார்.
3 ஆண்டுகள் வரை இந்த கவுன்சிலும், செயற்குழுவும் பொறுப்பில் இருக்கும். அதன் பிறகு புதிய உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
யு.என்.ஐ.