தமிழகத்தில் இன்று
நிகரகுவாவில் நிலநடுக்கம்: 2 சிறுவர்கள் சாவு
மனாகுவா:
மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தால் 2 சிறுவர்கள் இறந்தனர். நூற்றுக்கணக்கானவீடுகள் தரைமட்டமாயின.
தலைநகர் மனாகுவாவுக்கு தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந் நிலநடுக்கத்தின் பாதிப்பு ரிச்டெர் அளவு கோலில் 5.9 என்று பதிவானது.
நிலநடுக்கத்தால் லா எர்மிட்டா என்ற கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் அதற்குள் இருந்த இரு சிறுவர்கள் இறந்தனர் என்று ரேடியோசெய்தி தெரிவிக்கிறது.
அக் கிராமத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாயின. அது தவிர, சான் ஜுவான் ஓரியன்டே, டிராமோ ஆகியகிராமங்களில் உள்ள வீடுகளும் பெரும் சேதத்துக்குள்ளாகின.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில்மேலும் பலல் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணி முடிந்த பிறகு எத்தனை பேர் இறந்தனர் என்று உறுதியாகக் கூறமுடியும் என்று அரசு அதிகாரிகள் கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications