தமிழகத்தில் இன்று
கோவை: கள்ளத் தொடர்பை கண்டிக்கவும் ஜெலட்டின் குண்டா?
கோவை:
கோவை போலீஸ் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஜெலட்டின் குச்சி வெடித்தது. இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, கணபதியில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஒரு ஜெலட்டின் குச்சி வெடித்தது.
போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் குமாரவேலு என்பவரது குடும்ப பிரச்சனை தொடர்பாக இந்த ஜெலட்டின் குச்சிகளை யாரோ சிலர் வெடிக்கவைத்துள்ளனர்.
குமாரவேலுவின் மைத்துனர் பாலசுப்ரமணியத்திற்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தகுமாரவேலுவின் மனைவி பாப்பாத்திக்கும், கள்ளத் தொடர்பு வைத்திருந்த முத்து லட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு காரணமாக பாப்பாத்தியின் வீட்டில் குழப்பம் உண்டாக்க, முத்து லட்சுமியின் உறவினர்கள் ஜெலட்டின் குச்சியை வெடிக்க வைத்ததாககூறப்படுகிறது.
10 சென்டி மீட்டர் நீளமுள்ள இந்த ஜெலட்டின் குச்சி வெடித்ததில் சேதம் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications