தமிழகத்தில் இன்று
மின் உற்பத்திக்குத் தயாராகும் இரு அணு மின் நிலையங்கள்
டெல்லி:
கர்நாடகத்திலும், ராஜஸ்தானிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரு அணு மின் நிலையங்கள் நடப்பு நிதி ஆண்டுக்குள் உற்பத்தியைத் துவங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானில், ராஜஸ்தான் அணு மின் நிலையத்தில் நான்காவது அணு மின் உலையும், கர்நாடகத்தில் கெய்கா, பிரிவு 1-ல் புதிய அணு மின் உலையும்அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
2000-2001-ம் ஆண்டில் மின் உற்பத்தியைத் தொடங்கும் வகையில் கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. மின் உற்பத்திதொடங்கியவுடன் இரு அணு மின் நிலையங்களும் தேசிய மின் தொகுப்பில் இணைக்கப்படும்.
தாராபூர் அணு மின் நிலையத்தில் தலா 500 மெகாவாட் திறனுள்ள இரு அணு மின் உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2005-06-ம் ஆண்டில்இந்த உலைகள் மின் உற்பத்திக்குத் தயாராகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது இந்தியாவில் 12 அணு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 2,280 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.