தமிழகத்தில் இன்று
சொந்தமாக ஏவுகணை தயாரிப்போம் என்கிறது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் நாங்கள் முன்னேறி வருகிறோம். இனி நாங்களே ஏவுகணைகள் தயாரிப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இது தொடர்பாக, அந் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறியதாவது:
ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் நாங்கள் தன்னிறைவு பெற்றுவிட்டோம். இனி எங்களுக்கு எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை. விரைவில்நாங்களே ஏவுகணைகள் தயாரிப்போம்.
ஏவுகணைத் தொழிநுட்பத்தில் முன்னணியில் உள்ள சீனாவிடமிருந்து எந்த ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களிடம் உள்ளதொழில்நுட்பத்தை வைத்து மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய ஏவுகணைகளைத் தயாரிப்போம்.
எங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாங்களே ஏற்பாடு செய்து கொண்டால் யாரையும் எதிர்பார்க்கவேண்டும். மேலும், யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை என்றார் சத்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.