தமிழகத்தில் இன்று
மாரடைப்புக்கு கல்தா கொடுக்கும் தக்காளி
டெல்லி:
தக்காளி சாப்பிட்டால் மாரடைப்பும், சர்க்கரை வியாதியும் தடுக்க்கப்படும் என்று டாக்டர்கள்கூறுகின்றனர்.
தக்காளிச் சாறில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் இருக்கிறது. இவை இரண்டும்மாரடைப்புக்கும், சர்க்கரை வியாதிக்கும் எதிரிகள். இரு வியாதிகளையும் தக்காளி தடுப்பதாகடெல்லி சர்க்கரை வியாதி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த இதய நோய் நிபுணர் டாக்டர் ஏ.கே. ஜிங்கன்தெரிவித்துள்ளார்.
தக்காளிச் சாறில் "லைபோசின் இருப்பதால் அது கொழுப்புச் சத்தையும் குறைக்கிறது.கொழுப்புச்சத்து ரத்த குழாய்களில் சென்று சேர்ந்து அடைத்துக் கொள்வதால்தான் மாரடைப்புக்கானவாய்ப்புகள் அதிகரிக்கின்றன. லைபோசின் கொழுப்புக்களைக் கரைப்பதால் மாரடைப்பு வருவதுதடுக்கப்படுகிறது.
வைட்டமின் சி யும், ஈ யும் பச்சைக் காய்கறிகளிலும் பழங்களிலும் நிறைந்து இருக்கிறது. ஆனால்சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பழங்கள் சாப்பிடக் கூடாது என்பதால் பலர் வருடக் கணக்காகபழங்களே சாப்பிடாமல் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக வந்திருக்கிறதுதக்காளி.
தக்காளி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்காதுஎன்பதால் மருத்துவர் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு ஆலோசகரின் ஆலோசனை பெற்றுதக்காளி சாப்பிடலாம் என்று டாகட்ர் ஜிங்கன் கூறினார்.
அதற்காக சர்க்கரை வியாதி வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை . முன்னரே தக்காளி ,பழங்களையும், பச்சைக் காய்கறிகளையும் சாப்பிட்டு மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம், சர்க்கரைவியாதியை தள்ளிப் போடலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications