தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

குடிநீர் கட்டண மோதலில் 3 பேரைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்

சீனாவில், குடிநீர் கட்டணம் கட்டுவது தொடர்பான மோதலில் சீன போலீஸ்காரர் ஒருவர், தனது வீட்டு உரிமையாளரின் உறவினர்கள் மூன்றுபேரை சுட்டுக் கொன்றார்.

இந்த சம்பவம் பற்றி ஷாங்காய் மாலை பத்திரிக்கை தெரிவித்திருப்பாவது:

லியூ டெஷு என்ற போலீஸ்காரருக்கும் அவரது வீட்டு உரிமையாளருக்கும் 1.50 டாலர் குடிநீர் கட்டண பில் தொடர்பாக மோதல்ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லியூ, 4-ம் தேதி யூழு நகரிலுள்ள வீட்டு உரிமையாளரின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த அவரதுஉறவினர்கள் மூன்று பேரை சுட்டுக் கொன்றார். பக்கத்து வீட்டுக்காரரையும் சுட்டுக் காயப்படுத்தினார்.

அதன் பிறகு ஒரு டாக்ஸியைத் திருடிக் கொண்டு தப்பினார். போகும் வழியில், மேலும் நான்கு கார்களை கடத்திச் சென்றார். அவர்களில் ஒரு கார்ஓட்டுனரை சுட்டுக் காயப்படுத்தினார். கடைசியில் போலீஸில் சரண் அடைந்தார்.

அவர் மீது என்ன வழக்கு போடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

இதேபோல, திங்கள்கிழமை சீன போலீஸ் அதிகாரி ஒருவர் வேகமாகச் சென்ற வேன் டிரைவரை சுட்டுக் கொன்றார். இது தொடர்பாகஅவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இன்னொரு போலீஸ்காரரும், மூன்று பேரைக் கொன்றுள்ளதால் போலீஸார் மீதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ராய்ட்டர்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+