தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சென்னையில் பாதிரியார்கள் உண்ணாவிரதம்
சென்னை:
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் சனிக் கிழமை கிறிஸ்தவ பாதிரியார்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல்களை கண்டித்து சனிக்கிழமை "கறுப்பு நாள் கடைப்பிடிக்கப் போவதாக அகில இந்திய கிறிஸ்தவக் கவுன்சில்அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அந்த அமைப்பின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. சென்னையில் அண்ணாநகர் ஆர்ச் அருகே கிறிஸ்தவர்கள்உண்ணாவிரதம் இருந்தனர்.
சென்னை மயிலாப்பூர் மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்தார். இந்திய சுவிஷேச திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம், உண்ணாவிரதத்தைதொடங்கி வைத்தார்.
பாதிரியார்கள் தயானந்தன், ஓவன் ராபர்ட், ஸ்ரீதரன் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தேச ஒற்றுமைக்காக பிராத்தனையும்நடைபெற்றது.












Click it and Unblock the Notifications