தமிழகத்தில் இன்று
கனடா ராணுவத்தின் "ப்ராப்ளம்
டொரன்டோ:
ராணுவம் கொடுக்கும் ப்ரா வேண்டாம். நாங்கள் வாங்கும் ப்ராவுக்குப் பணம் கொடுத்தால் போதும் என்று கனடா ராணுவத்தைச் சேர்ந்தவீராங்கனைகள் கூறியுள்ளனர்.
கனடா ராணுவத்தில் சுமார் 1,250 பெண்கள் பணிபுரிகின்றனர். ராணுவப் பணியில் இருப்பதால் உடையைப் போன்று உள்ளாடைகளையும் கடினமானதாகக்கொடுக்க முடிவு செய்தது ராணுவம். இதில் ப்ராவும் அடக்கம்.
ராணுவ பெண் அதிகாரிகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் ஆண்டுக்கு 4 ராணுவ ப்ராக்கள் கொடுப்பது என்றும்வெளிநாடுகளுக்குப் பயிற்சி பெறச் செல்லும்போது கூடுதலாக 4 ப்ராக்கள் தருவது என்றும் கனடா பாதுகாப்புத் துறை முடிவு செய்தது.
ஆனால், புதிய வகை ராணுவ ப்ராக்களுக்கு வீராங்கனைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு ராணுவம் கொடுக்கும் ப்ரா வேண்டாம். அதற்குப்பதிலாக பணம் கொடுத்தால் வெளியில் நாங்கள் வேறு ப்ராக்களை வாங்கிக் கொள்வோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ராணுவம் வழங்கும் ப்ரா எங்களது உடலுக்குத் தகுந்தவாறு இருக்கவேண்டும். நாங்களும், ஆண்களைப் போல் வேகமாகப் பணியாற்ற வேண்டியுள்ளது.அதற்கு ஏற்றார்போல் அந்த ப்ராக்கள் இருக்கவேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
புதிதாக வழங்கப்படவுள்ள ப்ரா பற்றி வீராங்கனைகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 92 சதவீதம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட டிசைன்களில்ப்ராக்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
80 சதவீதம் பேர் கடைகளில் விற்கும் ப்ராக்களே மேல் என்றும், 55 சதவீதம் பேர் ப்ராக்களுக்குப் பதில் பணம் கொடுக்கவேண்டும் என்றும் 27சதவீதம் பேர் ராணுவ ப்ராக்களைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications