தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

திருச்சி பெண் சாமியார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

திருச்சி:

திருச்சியில் ஆசிரியையைக் கொன்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் பெண்சாமியார் ஜெயந்தி மாதா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

திருச்சி கே.கே. நகரில் ஜெயந்தி மாதாஜி என்பவர் ஸ்ரீதேவி சன்னிதானம் என்றபெயரில் ஆசிரமம் நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில் கணக்காளராக பணி புரிந்துவந்த லீலாவதி என்ற ஆசிரியை திடீரென இறந்தார். இந்த சாவில் ஏதோ மர்மம்இருப்பதாக அங்கு முன்பு பணிபுரிந்த சிவ சண்முகம் என்பவர் போலீசில் புகார்செய்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் பெண் சாமியார் ஜெயந்தி மாதாஜி, ஸ்ரீ புத்ரா, சின்னசத்ய நாராயணா, பெரிய சத்ய நாராயணா, என்ஜீனியர் தினகரன் உள்பட 12 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல்,கொலை செய்தல், தடயத்தை மறைத்தல் மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குதொடரப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.ஆனால் அவர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவர்கள் மீது 5-ம் தேதி இரண்டாவது ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது.ஆனால் அதுஒத்திவைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

154 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், இந்த வழக்கு தொடர்பாக 60சாட்சிகளிடம் விசாரணை நடத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+