தமிழகத்தில் இன்று
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது பாக்.
இஸ்லாமாபாத்:
இந்தியாவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறியதாவது:
இந்தியாவுடன் பாகிஸ்தானுக்கு எந்த விரோதமும் இல்லை. இந்தியாவுடன் நட்புறவு கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியாவுடன் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.சமத்துவம், நீதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவுடன் உறவு வைத்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது.
இரு நாட்டுக்கும் முக்கியப் பிரச்சினையாக உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டால்தான், பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக நிதிஒதுக்கவேண்டிய தேவை இருக்காது. காஷ்மீர் பிரச்சினை தீர்ந்தால்தான் மற்ற பிரச்சினைகளும் எளிதில் தீர்க்கமுடியும் என்றார் சத்தார்.
யு.என்.ஐ.