நவ. 10-ல் மஸ்கட்டில் இந்தியா-பாக். ஒருநாள் கிரிக்கெட்

Subscribe to Oneindia Tamil

துபாய்:

ஓமன் நாட்டில் மஸ்கட் நகரில் நவம்பர் 10-ம் தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இத் தகவலை மஸ்கட் கிரிக்கெட் சங்கத் தலைவர் மது ஜாஸ்ரானி தெரிவித்தார். அக்டோபர் 16-ம் தேதி தொடங்கும் மஸ்கட் விழாவுடன் இணைந்த இந்தகாட்சிப் போட்டியை நடத்துவது குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது கென்யா கிரிக்கெட் அணிக்குப் பயிற்சி அளித்து வரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சந்தீப் பாட்டீல், இந்தியா-பாகிஸ்தான் இடையேநடைபெற உள்ள போட்டிக்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.

50 ஓவர்கள் கொண்டதாக பகல்-இரவுப் போட்டியாக இது நடைபெறும். சுல்தான் கபூஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி டிவியில்நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். செயற்கை புல் தளத்தில் இப் போட்டி நடைபெறும்.

இரண்டாவது முறையாக மஸ்கட்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. 1992-ம் ஆண்டு முதன்முறையாகநடைபெற்ற போட்டியில் அசாருதீன் தலைமையிலான இந்திய அணியை மியான்தத் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோற்கடித்தது என்றார் ஜாஸ்ரானி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+