தமிழகத்தில் இன்று
இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரிப்பு
கல்கத்தா:
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டின் ஏற்றுமதி குறித்து பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் தலைவர் ஜெ.எஸ். பாஷின் கூறியதாவது:
இந்தியாவின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொறியியல் துறைப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
1999-2000-ம் ஆண்டில் பொறியியல் துறைப் பொருட்களின் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்தது. அதாவது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.20,240கோடி அளவையும் கடந்து கூடுதலாக ரூ.5 கோடிக்கு ஏற்றுமதி அதிகரித்தது.
அதிகரித்து வரும் ஏற்றுமதி அளவைக் கருத்தில் கொண்டு நடப்பு நிதி ஆண்டில் ரூ. 23,320 கோடிக்கு பொறியியல் துறைப் பொருட்களை ஏற்றுமதி செய்யஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் துறைப் பொருட்களில் குறிப்பாக அலுமினியம், இரும்பு, கனகர கருவிகள், விவசாய உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு வெளிநாடுகளில்நல்ல டிமாண்ட் உள்ளது என்றார் பாஷின்.
யு.என்.ஐ.