தமிழகத்தில் இன்று
கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களும் சாட்சியம்தான்...மும்பை நீதிமன்றம்
மும்பை:
கம்ப்யூட்டர் பிரின்டர் மூலம் எடுக்கப்பட்ட ஆவணங்களையும் ஒரு வழக்கில் சாட்சியமாக சேர்க்கலாம் என்று மும்பை தடா நீதிமன்றம் உத்தரவுஒன்றில் கூறியுள்ளது.
நடிகர் சஞ்சய் தத் மீதான வழக்கு விசாரணிைன்போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. சஞ்சய் தத் வீட்டிலிருந்து துபாயில் தலைமறைவாக உள்ள தீவிரவாதிஅனீஸ் இப்ராகிமின் வீட்டுக்கு செய்யப்பட்ட போன் கால் குறித்து தடா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. அனீஸ் இப்ராகிம், தாவூத் இப்ராகிமின்சகோதரர்.
இந்த வழக்கு விசாரணையின்போது கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களை சாட்சியமாக சேர்க்க முடியுமா என்ற விவாதம் வந்தது. இதுகுறித்து நீதிபதிகூறுகையில், இந்தியாவில் சமீப காலமாக ஆவணங்களைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் முறை அமலில் உள்ளது. எனவே இந்த விஷயத்தில் இங்கிலாந்துமுறை சட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
ஆங்கிலேய சட்டத்தில் "டாக்குமென்ட் என்ற வார்த்தைக்கு ஒரு பொருளின் மீது எழுதப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் என்று விளக்கம்தரப்பட்டுள்ளது. இந்தியச் சட்டத்திலும் இதேபோன்ற அர்த்தம்தான் உள்ளது. எனவே கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களையும் "டாக்குமென்ட்களாக கருதமுடியும் என்றார்.
யு.என்.ஐ.