தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஒரே இடத்தில் 12,000 ஊழியர்கள்... அலுவலகம் கட்டுகிறது மைக்ரோசாப்ட்

சியாட்டில்:

12 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் பணியாற்றும் வகையில் புதிய பெரிய அலுவலகம் கட்ட உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு அருகில் உள்ள ரெட்மாண்ட்டில் இந்த அலுவலகம் கட்டப்படவுள்ளது. இத் தகவலை, ரெட்மாண்ட் நகரத் திட்டப்பிரிவு அதிகாரி லூசி ஸ்லோமேன் தெரிவித்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இப் புதிய திட்டம் குறித்து பரிசீலித்து வருவதாகவும், விரைவில் அதற்கு அனுமதி தரப்படும் என்றும் அவர் கூறியதாகஅமெரிக்க பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், இதை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டான் லீச் மறுத்துள்ளார். ஊழியர்களுக்காக இப் புதிய கட்டடம் கட்டப்படவில்லை.தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குதாரர்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்து மைக்ரோசாப்ட் நிறவனத்தை இரண்டாகப்பிரிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால், பிரிந்து செல்லும் பங்குதாரருக்காக இப் புதிய கட்டடம் கட்டப்படுகிறது என்றார் டான் லீச்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+