தமிழகத்தில் இன்று
இனி நேபாளம் செல்ல பாஸ்போர்ட்வேண்டும்
காத்மாண்டு:
இந்தியாவிலிருந்து நேபாளம் செல்ல இனிமேல் பாஸ்போர்ட் பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
காத்மாண்டுவிலிருந்து டெல்லி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏழு மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்டது. அதையடுத்து இரு நாடுகளும் பல்வேறுபாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், இரு நாடுகளும் பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்களை கட்டாயமாக்குவது எனமுடிவு செய்துள்ளன.
இரு நாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் இது முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் மாதம் 1-ம தேதியிலிருந்து இது அமலுக்கு வரும்.
தற்போதுள்ள நிலையை மாற்றி பயணிகளுக்கான திருத்தி அமைக்கப்பட்ட ஆவணங்களை அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து அமல்படுத்துவது என இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
முதலில் இது விமானப் பயணிகளுக்கு அமல்படுத்தப்படும். பின்னர் இது மற்ற பயணிகளுக்கும் விரிவாக்கப்படும்.
பத்திரிகையாளர்கள் பாஸ்போர்ட் தவிர வாக்காளர் அடையாளர் அட்டை, குடியுரிமை சான்றிதழ்கள், மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டஆவணங்களையும் கொண்டு பயணிக்கலாம்.
மூன்று நாட்கள் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியத் தரப்பிற்கு உள் துறை செயலாளர் கமல் பாண்டேயும், நேபாளத் தரப்பிற்கு பி.பி.போக்காரெல்லும் தலைமை தாங்கினர்.
யு.என்.ஐ.