தமிழகத்தில் இன்று
அன்று தேசிய விலங்கு...இன்று தேசியப் பறவை ... 50 மயில்கள் மர்ம சாவு
மஹாராஜ்புரா (மத்தியப்பிரதேசம்):
மத்தியப் பிரதேச மாநிலம் மஹாராஜ்புரா மாவட்டத்தில் 50 மயில்கள் விஷம் கலந்தகம்பை உண்டதால் இறந்தன.
மஹாராஜ்புராவில் தேசியப் பறவையான மயில் அதிக அளவில் உள்ளது.இப்பகுதியில் கம்பு அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு கடந்த 5 நாட்களில் 50மயில்கள் இறந்துள்ளன. வயலில் விளைந்த கம்பை சாப்பிட்டதால் அவை இறந்ததாகதெரிகிறது.
கம்புப் பயிரில் பூச்சி மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை விவசாயிகள் அதிகம்பயன்படுத்துகின்றனர். இவற்றை உண்ட மயில்கள் இறந்துள்ளன. தடுப்பு மருந்து,மயில்களுக்கு விஷமாக மாறி அவற்றின் உயிரைப் பறித்துவிட்டதாக மயில்களைபரிசோதித்த கால்நடை மருத்துவர் கூறியுள்ளார். இதை மாவட்ட ஆட்சித் தலைவர்அகர்வாலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இங்கு பயிரிடப்பட்டுள்ள கம்பு பரிசோதனைக்கு அனுப்பப்டும். அதில் விஷம்இருப்பது உறுதியானால் உபயோகத்திற்கு தடை விதிக்கப்படும் எனவும் அரசுதெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரிசா மாநிலம் கனநந்தன் வன விலங்குகள் பூங்காவில்அரிய வகை வெள்ளைப் புலிகள் உட்பட 11 புலிகள் மர்ம நோயால் இறந்தன.இப்போது 50 மயில்கள் இறந்துள்ளன. இப்படி இந்தியாவின் தேசிய விலங்கும், தேசியபறவையும் இறந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications