தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கணவரின் கண்களைத் தானம் செய்த அதிமுக பிரமுகரின் மனைவிக்கு ஜெ. நன்றி

சென்னை:

கணவர் இறந்த பிறகு அவர் உறுதியளித்தபடி கண்களை தானம் கொடுத்த அ.தி.மு.கபிரமுகரின் மனைவிக்கு ஜெயலலிதா நன்றிக் கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் கீழரதவீதியில்வசித்து வந்தவர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (வயது 49). இவர் மாவட்ட அ.தி.மு.ககைத்தறிப் பிரிவு துணை செயலாளராக இருந்தார். தீவிர ஜெயலலிதா விசுவாசியானஇவர், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை ஒட்டி தனது கண்களை தானம் செய்வதாகஉறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் அவர் திடீரென்று உடல் நலம் குன்றி இறந்து போனார். ஆனாலும்,கணவகரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது மனைவி அனுசுயா, மதுரைஅரவிந்த கண் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார். அங்கிருந்து கண் வங்கிகுழுவினர் விரைந்து வந்து, கிருஷ்ணமூர்த்தியின் கண்களை தானமாக எடுத்துச்சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அனுசுயாவுக்கு ஜெயலலிதா உருக்கமானநன்றிக் கடிதம் எழுதியுள்ளாார். ஜெயலலிதா கடிதம் வருமாறு:

என் பாலும், கட்சியின் பாலும் மிகுந்த ஆர்வம் கொண்டு பணியாற்றி வந்தகிருஷ்ணமூர்த்தியின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று.

என்னுடைய பிறந்த நாள் விழாவின் போது தன்னுடைய கண்களை தானம் செய்வதாககிருஷ்ணமூர்த்தி அறிவித்திருந்ததை செயல்படுத்திய தாங்கள் மற்றும் தங்களது மகன்பாலசுப்ரமணியன் ஆகியோரது கட்சிப் பற்றும், மன உறுதியும் என்னை மிகவும்நெகிழ்ச்சி கொள்ளச் செய்தது.

ஈடு செய்ய முடியாத இந்த இழப்பின் துயரத்தில் தங்கள் குடும்பத்தினருடன் நானும்பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+