தமிழகத்தில் இன்று
கணவருக்காக திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நளினி முடி காணிக்கை
வேலூர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட தன் கணவருக்குதண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என வேண்டி அவரது மனைவி நளினிதிருப்பதிக்கு பிரார்த்தனை செய்து முடிகாணிக்கை செலுத்தியுள்ளார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு அவரது பெண் குழந்தையின் நலனைக்கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படியில் ஆயுள் தண்டனையாகமாற்றப்பட்டது.
ஆனால் அவரது கணவர் முருகனின் தூக்கு தண்டனை மாற்றப்படவில்லை. அதுவும்மாற்றப்பட வேண்டும் என்று சிறையில் நளினி பிரார்த்தனை செய்து வந்தார். சிறையில்இருந்த வேப்ப மரத்தை தினமும் 108 முறை சுற்றி வந்தார்.
கணவரை சந்தித்தபிறகு வேப்ப மரத்தை சுற்ற மாட்டேன் என்றார். இப்போது திருப்பதிவெங்கடாஜலபதியிடம் அடைக்கலம் நாடியுள்ளார். கணவர் நலனுக்காக முடிகாணிக்கை செலுத்தியுள்ளார்.
தனது கணவரின் உயிர் காக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்ட அவர் தனதுதம்பி பாக்கியநாதனிடம் சிறிது முடியை வெட்டி கொடுத்தனுப்பினார். அதை அவர்திருப்பதியில் முடி காணிக்கை செலுத்துமிடத்தில் செலுத்திவிட்டு வந்தார்.
திருப்பதியின் பிரசித்தி பெற்ற பிரசாதமான லட்டு வாங்கி வந்து தன் சகோதரியிடம்கொடுத்தார்.












Click it and Unblock the Notifications