தமிழகத்தில் இன்று
ஐ.எஸ்.ஐ. ஊடுறுவல் குறித்து அறிக்கை தேவை என்கிறார் லத்தீப்
சென்னை:
தமிழ்நாட்டில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஊடுருவல் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய தேசிய லீக்தலைவர் அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில், செய்தியாளர்களுக்கு அப்துல் லத்தீப் அளித்த பேட்டி:
கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் கேரளா, கோவா, ஆந்திரா உள்பட 4 மாநிலங்களில்சிறுபான்மையினர் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகள் என்று உள் துறை அமைச்சர் அத்வானி கூறுகிறார்.
கோவாவில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள தமிழகத்திலும் சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்களே, இதற்கு யார் காரணம்என்பதை அத்வானி தான் விளக்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகள் தான் காரணம் என்றே வைத்துக் கொள்வோம். ஏன் அந்த தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க முடியவில்லை. இதற்குகாரணமான உள்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே.
ஐ.எஸ்.ஐ. ஊடுருவல் குறித்து ஓராண்டுக்கு முன்பே வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அத்வானி சொன்னார். ஆனால், இதுவரை எதுவும்வெளியிடப்படவில்லை. எங்களுடைய கோரிக்கை எல்லாம், பிரதமர் வாஜ்பாய் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரதமர்தலையிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அத்வானி ராஜினாமா செய்ய வேண்டும்.
பாரதீய ஜனதாக் கட்சியினர் தங்களது கொள்கைகளை ஆட்சி புரிவதில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர்என்றார் லத்தீப்.