தமிழகத்தில் இன்று
ராமதாஸை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்கிறார் வாழப்பாடி
சென்னை:
இந்தியா என்றொரு நாடே இல்லை. இந்தியன் என்றொரு இனமும் இல்லை என்பதை பாட்டாளி மக்களின் கட்சியின் கொள்கை விளக்கப் புத்தகமாகவெளியிட்ட ராமதாஸை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடிராமமூர்த்தி கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
ஒகேனக்கல்லில் பாமகவின் பேச்சாளர்களின் பயிற்சி முகாம் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கட்சி நிறுவனர் ராமதாஸ், இப் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டு பயிற்சி அளித்துள்ளார்.
அந்த முகாமில் பாமக கொள்கை விளக்க அணி சார்பில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் அடங்கியதுதான்ஒரு நாடு. அந்த அடிப்படையில் இந்தியா ஒரு தேசமன்ற. பல தேசங்களைக் கொண்ட ஒரு நாடு.
காரணம், ஒரு தேசத்துக்கென பொதுவான மொழியும், பொதுவான வாழ்க்கை முறையும் இருக்கவேண்டும். இந்தியாவுக்கு அப்படி ஏதும் இல்லை. பலமொழிகள் பேசும் தேசங்களைக் கொண்ட நாடு இது.
இங்கு இந்தியா என்றொரு மொழியும் இல்லை. இந்தியன் என்ற இனமும் இல்லை. எனவே இன்தியா என்றொரு நாடும் இல்லை.
ஆகவே, தன்னுரிமை பெற்ற தமிழ் தேசிய குடியரசு உடனடியாக அமைக்கப்படவேண்டும். அதற்கு குடியுரிமை வழங்கும் அதிகாரம் உள்பட எல்லாஉரிமைகளும் வழங்கப்படவேண்டும்.
இந்திய அரசு என்பது பெரும் முதலாளிகளின் தலைமையிலான பார்ப்பனீய இந்திய ஆதிக்க அரசாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பல தேச விரோத கருத்துக்களைக் கொண்டது அப் புத்தகம். இந்திய அரசையும், ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏற்றுக் கொள்ளாத ராமதாஸ்இன்னும் மத்திய அமைச்சரவையில் நீடிக்கக்கூடாது.
தமிழ் தேசம், தன்னுரிமை என்று பிரிவினை கேட்கும் ராமதாஸை இனியும் மத்திய அரசு விட்டு வைக்கக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
அதேபோல், சென்னையில் உள்ள தலைமைச் செயலகக் கோட்டையை அவமதித்து அழைப்பிதழ் வெளியிட்டது பற்றியும், இது போன்ற பிரிவினை வாதகொள்கைகள் அடங்கிய புத்தகம் பற்றியும் தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் கூறியுள்ளேன்.
ஏற்கெனவே இப்படி தமிழ் தேசம் கேட்டு தமிழ் தேசிய மீட்புப் படை என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வந்தது. அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்அனைவரும் தடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ராமதாஸையும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவேண்டும். விடுதலைப் புலிகளின் லட்சியமான அகண்ட தமிழகம்திட்டப்படியே ராமதாஸ் செயல்படுகிறார் என்பது இப்போது வெளிச்சமாகிவிட்டது.
ஏற்கெனவே புலிகளிடம் ரூ.35 லட்சம் வாங்கிக் கொண்டு தமிழர் தன்னுரிமை மாநாடு நடத்தியவர் ராமதாஸ் என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications