தமிழகத்தில் இன்று
எம்.எல்.ஏ. விலகினார்: தேசிய லீக் கட்சி உடைந்தது
திருச்சி:
தமிழ்நாடு தேசிய லீக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏ. நாசர் கட்சியிலிருந்துவிலகி, புதிய கட்சியைத் துவக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
புவனகிரி எம்.எல்.ஏ.வான நாசர், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில்,இந்திய தேசியலீக் கட்சியிலிருந்து நாங்கள் பிரிந்து வந்த பிறகு, 1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்தோம்.
ஆனால் கட்சியிலிருந்து ஏன் பிரிந்து வந்தோமோ அந்த லட்சியத்தை கட்சித் தலைவர்கள் முகம்மதுஇஸ்மாயில் எம்.எல்.ஏ. உள்பட பலரும் மறந்து விட்டனர். முஸ்லீம் மக்களின் நலனைக் காக்கஅவர்கள் தவறி விட்டனர்.
கட்சியின் பொதுக் குழு இதுவரை கூட்டப்படவில்லை. இதனால் கட்சித் தொண்டர்கள் வெறுத்துப்போயுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் முஸ்லீம்களின் நலனைப் பாதுகாக்க புதிய கட்சி ஒன்றைத் துவக்குவதைத் தவிர வேறுவழியில்லை. எனது ஆதரவாளர்களுடன் ஜூலை 23-ம் தேதி ஆலோசனை நடத்திய பிறகு புதிய கட்சிகுறித்து முடிவெடுக்கவுள்ளேன் என்றார் அவர்.
யு.என்.ஐ.