For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
இந்தியா வந்தார் ஆஸ்திரேலியா பிரதமர்
டெல்லி:
ஆஸ்திரேலியா பிரதமர் ஜான் ஹோவர்டு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார்.
அரசியல், பொருளாதாரம், ஃபிஜி நெருக்கடி போன்றவை குறித்து அவர் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
முன்னதாக லண்டனில் இருந்து இந்தியா வந்த ஆஸ்திரேலியா பிரதமர் ஜான் ஹோவர்டை விமான நிலையத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
1998-ம் வருடம் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பின் ஆஸ்திரேலியா, இந்தியா உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டது.
அந்த உறவை வலுப்படுத்தி இருநாட்டு நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் இந்த பயணம் இருக்கும்.
யு.என்.ஐ.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Monday, July 10, 2000, 5:30 [IST]