தமிழகத்தில் இன்று
பெங்களூர் சர்ச்சில் குண்டுவெடிப்பு
பெங்களூர்:
பெங்களூரில் சர்ச் அருகே வெடிகுண்டு வெடித்தது. இன்னொரு சம்பவத்தில் ஓடிக் கொண்டிருந்த வேன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர்பலியானார்கள்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
பெங்களூரில் ஜெகஜீவன்ராம்நகரில் உள்ள செயின்ட்பால் கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை விழா நடந்தது. விழா முடிந்ததும் அதில் கலந்துகொண்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் சமயத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
குண்டுவெடிப்பில் ஆலயத்தின் கண்ணாடிகள் சுக்குநூறாய் உடைந்து நொறுங்கின. இதையடுத்து அங்கிருந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள்ஜெகஜீவன்ராம் நகர் போலீஸ் நிலையத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். 2ஆட்டோக்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் நகர போலீஸ் கமிஷனர் மடியாள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
சர்ச்சில் வெடித்த குண்டு வெளிநாட்டுக் குண்டாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
சிலிண்டர் வெடித்து வேன் எரிந்தது:
இன்னொரு சம்பவத்தில், மாகடி ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் மினர்வா மில் கேட் அருகேவந்து போது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. வேன் சுக்குநூறாய் உடைந்து சிதறியது.
இதில், எதிரே வந்த இன்னொரு வேனும் உடைந்து நொறுங்கியது. வெடித்துச் சிதறிய வேனில் இருந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இன்னொருவர்விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. வேன் வெடித்ததற்குக் காரணம் தெரியவில்லை. சிலிண்டராக இருக்கலாம் என்று போலீஸார்தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் தொடரும் குண்டுவெடிப்புகள்:
கர்நாடக மாநிலத்தில் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்களில் குண்டுகள் வெடித்து வருகின்றன. முன்பு குல்பர்காவில் வெடித்தது. கடந்த சனிக்கிழமை ஹூப்ளியின்புறநகர்ப்பகுதியான புனிதலூதரன் தேவாலயத்தில் குண்டுவெடித்தது.












Click it and Unblock the Notifications