For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இலங்கையிலிருந்து தமிழக மீன்பிடி படகுகள் மீட்பு

சென்னை:

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீன்பிடி படகுகளை தமிழக மீட்புக் குழு ஒன்றுஇலங்கை சென்று மீட்டு வந்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக மீன்பிடித் தளங்களிலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு, இலங்கையில் காவலில் வைக்கப்பட்ட தமிழக மீனவர்களில் நதல் கட்டமாக 7 பேர்கடந்த மாதம் 2-ம் தேதி விடுவிக்கப்ட்டு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.

இந்த 7 மீனவர்களும், இரண்டு மீன் பிடி விசைப்படகுகளுடன் இலங்கை படையால் கைது செய்யப்பட்டனர்.இப்போது இந்த இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி இந்த 2 படகுகளையும் தமிழகம்கொண்டு வருவதற்காக ராமேஸ்வரத்திலிருந்து 8-ம் தேதி அன்று மீட்புக் குழு ஒன்று இலங்கைக்குஅனுப்பப்பட்டது.

இக்குழுவினர் ஒரு மீன்பிடி படகை மட்டும் மீட்டு வந்துள்ளனர். இன்னொரு படகு இலங்கை தலைமன்னாரில்கடல் மணலில் புதைந்த நிலையில் உள்ளதால் அதை மீட்டு கொண்டு வருவதற்கு மீண்டும் மீட்புக் குழுஇலங்கை அனுப்பப்பபடவுள்ளது.

மேலும் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்டு வர தொடர் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அரசு கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X