தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சுற்றுலா வந்த 12 இளைஞர்கள் மும்பை கடலில் மூழ்கி சாவு

மும்பை:

மும்பைக்கு சுற்றுலா வந்த 12 வாலிபர்கள் கடலில் மூழ்கி இறந்தனர். மும்பையின் வடமேற்குப் பகுதியான அக்ஷா பகுதியிலுள்ள கடலில் அவர்கள்நீச்சலடிக்கச் சென்ற போது இச்சம்பவம் நடந்தது.

மும்பைக்கு சுற்றுலா வந்த வாலிபர்கள் அங்குள்ள அக்ஷா பகுதியிலுள்ள கடலுக்கு குளிக்கச் சென்றனர். அனைவரும் கடலின் ஆழமான பகுதிக்குச்சென்றார்கள். அந்தப் பகுதியிலிருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை. தண்ணீரில் மூழ்கிய அவர்கள் உதவி கோரி குரல் எழுப்பியுள்ளனர். ஆனால்பெரிய பெரிய அலைகள் இருந்ததால், அவர்கள் நடுக்கடலில் மூழ்கிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருப்பது யாருக்கும் தெரியவில்லை.

இந்தச் சமயத்தில், கடற்கரையில் சென்றுகொண்டிருந்த ரஜினிகாந்த் அலிஷ்கார் என்பவர் இளைஞர்கள் கடலில் தத்தளிப்பதைப் பார்த்துள்ளார். இதையடுத்துகடலில் குதித்து அவர்களைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் சைலேஷ் வகேலா (15) என்ற மாணவரை மட்டும் காப்பாற்ற முடிந்தது.

சேத்தன் வகேலா (15), வினோத் காவா(21), நீலேஷ் வகேலா(17), ஜெய்தீஷ் கோகில் (24), பிரலாத் ஆதம் (21), ஹேமந்த் போரே (18), முகேஷ்யாதவ் (22), மிலின்ட் (21), மிலின்ட் இன்டுல்கர், சச்சின், ஷிர்காந்த் சோனி ஆகியோர் கடலில் மூழ்கி இறந்தனர்.

இவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+