தமிழகத்தில் இன்று
குளோனிங் பசு கன்று ஈன்றது
டோக்கியோ:
குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட பசுவுக்கு ஒரு கன்றுக் குட்டி பிறந்துள்ளது.உலகிலேயே குளோனிங் மூலம் உருவான ஒரு பசுவுக்கு கன்று பிறப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இந்த குளோனிங் பசு, ஜப்பானில் உள்ள இஷிகாவா கால்நடை ஆராய்ச்சி மையத்தில்உருவாக்கப்பட்டது. பசுவும், கன்றும் நலமாக உள்ளதாக அந்த மையம்தெரிவித்துள்ளது.
பிறந்த கன்றுக் குட்டி 53 சென்டிமீட்டர் நீளம் உள்ளது. 26.5 கிலோ எடையுடன்உள்ளது. இயற்கை பிரசவம் மூலம் இது பிறந்தது. யாருடைய உதவியும் இல்லாமல்பிறந்த ஏழாவது நிமிஷத்தில் எழுந்து நின்றது.
குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட பசு, 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தது.செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கர்ப்பம் ஆனது. இந்தப் பசுவுடன் சேர்த்து மற்றொருபசுவும் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டன.
இவை தான் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் பசுக்கள் ஆகும். இரண்டாவதுபசுவும் தற்போது கர்ப்பமாக உள்ளது. செப்டம்பர் மாதம் அது கன்று போடும்.












Click it and Unblock the Notifications