தமிழகத்தில் இன்று
ராமதாசுடன் பேசத் தயார் என்கிறார் திருமாவளவன்
சென்னை:
வன்முறையை தடுக்க டாக்டர் ராமதாசுடன் அமைதிப் பேச்சு நடத்தத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்கூறினார்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க வினருக்கும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.இதனால் கடலூர்மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும் வன்முறை ஏற்பட்டது.
இதையடுத்து கடலூர் மாவட்டம் மா.புளியங்குடி என்ற கிராமத்திற்கு செல்ல திருமாவளவனுக்கு அரசு தடை விதித்துள்ளது. இச்சூழ்நிலையில் திருமாவளவன்அளித்த பேட்டி:
பொது நலன் கருதியும், அமைதி கருதியும் நான் தடையை மீறப் போவதில்லை. போலீஸ் அனுமதியுடன் நான் மீண்டும் புளியங்குடி செல்வேன். இந்த தடையை,ராமதாசை சமாதானப்படுத்துவதற்காகவே விதித்துள்ளதாக கருதுகிறேன். தி.மு.க அரசு விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராகவே செயல்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் அமைதி திரும்ப ராமதாசுடன் பேசஅரசு நடத்த த.மா.கா விரும்புவதை வரவேற்கிறேன். ஆனால், ராமதாஸ் நான் தகுதிகுறைந்தவன் என்கிறார். அவரை விட மக்கள் செல்வாக்கிலும் நான் குறைந்தவனில்லை என்பதை கடந்த தேர்தலில் நரூபித்துள்ளேன்.
மூப்பனார் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படுமானால் ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications