Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஸ்பீட் ஆதரவுக் கும்பலின் வன்முறை தொடர்கிறது

சுவா:

பிஜியில், புரட்சியாளர்களின் ஆதரவாளர்கள் அடங்கிய கும்பல் ஒன்று, தலைநகர் சுவாவிற்கு அருகேயுள்ள ஒருதீவிலுள்ள லாட்ஜ் ஒன்றை தீவைத்துக் கொளுத்தினர். போலீஸ் நிலையத்தையும் அவர்கள் சூறையாடமுயன்றனர்.

புரட்சிக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின் ஆதரவாளர்கள் இவர்கள். ஸ்பீடுக்கும், ராணுவ அரசுக்கும்ஞாயிற்றுக்கிழமை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி மே 19-ம் தேதி முதல்நாடாளுமன்றத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட 27பினைக் கைதிகளை ஜார்ஜ் ஸ்பீட் விடுவிக்க வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில், தீவு முழுவதிலும் ஸ்பீட் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். சுவாவிற்கு100 கிலோமீட்டர் வட கிழக்கில் உள்ள லெவுகா தீவில் உள்ள லாட்ஜ் ஒன்றை ஸ்பீட் ஆதரவுக்கும்பல் தீவைத்துக் கொளுத்தியது. இதில் லாட்ஜ் முழுவதும் எரிந்து சாம்பலானது என்று ராணுவமேஜர் ஹோவர்ட் பொலிடினி கூறினார்.

கிறிஸ்தவர்களுக்கு விரோதமான லாட்ஜ் என்று கூறி அக்கும்பல் தீவைத்துக் கொளுத்தியது. இதன்பிறகு லாட்ஜ் அருகிலுள்ள ஒரு போலீஸ் நிலையத்தைச் சூறையாடவும் அக்கும்பல் முயன்றது. இருப்பினும்போலீஸார் எச்சரிக்கையாக சுட்டதால் அக்கும்பல் சென்று விட்டது.

ஏற்கனவே கொராவு என்ற தீவில், ஸ்பீட் ஆதரவாளர்கள் 300 பேர், ஒரு காவல் நிலையத்தைப்பிடித்து வைத்துள்ளனர். இங்கு 25 போலீஸார் சிக்கிக் கொண்டுள்ளன. இதேபோல, வெனுவா லேவுஎன்ற பகுதியை பண்ணைக்காரர்கள் பிடித்து வைத்துள்ளனர். இது பிஜியின் இரண்டாவது பெரிய தீவு என்பதுகுறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+