தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 300 மாணவர்கள் மயக்கம்
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அருகிலுள்ள நங்கவல்லி பகுதியில் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 300 மாணவர்கள் ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நங்கவல்லியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலை உணவு சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும்வாந்தியெடுக்க ஆரம்பித்தனர். உடனடியாக அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையைக் கடந்து விட்டனர் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கருத்துத் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் முழுவீச்சில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications