தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஈரான் டூ இந்தியா கேஸ்லைன்: ரஷிய நிறுவனம் அமைக்கிறது
மாஸ்கோ:
இந்தியா, ஈரானுக்கு இடையே, அரபிக் கடல் வழியாக அமைக்கப்படவுள்ள கேஸ்குழாய் பதிக்கும் பணியை, ரஷியாவின் மிகப் பெரிய கேஸ் நிறுவனமான காஸ்ப்ரோம்மற்றும் இந்தியாவின் கேஸ் அத்தாரிட்டி ஆகியவை இணைந்து மேற்கொள்ளவுள்ளன.
இதுதொடர்பான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையே, கையெழுத்தியாகியுள்ளது.ரஷியாவின் நவோஸ்தி செய்தி நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 1500 கிலோமீட்டர் நீளத்திற்கு கேஸ் குழாய் பதிக்கப்படவுள்ளது.இதுதொடர்பான ஆய்வுப் பணியை காஸ்ப்ரோம் நிறுவனம் மேற்கொள்ளும். மூன்றுபில்லியன் டாலர் மதிப்பில் இந்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மொத்தம் ஏழுஆண்டுகளில் இப்பணி முடியும்.
ஈரானிலிருந்து, இந்தியாவுக்கு இந்தக் குழாய்கள் மூலம் 57,000 கியூபிக் மீட்டர் கேஸ்அனுப்பப்படும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications