For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

டிரான்ஸ்பார்மருக்கு வெடிகுண்டு வைக்க முயன்றவர் கைது

சென்னை:

பெரம்பலூரில் டிரான்ஸ்பார்மருக்கு வெடிகுண்டு வைக்க முயன்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக விடுதலை படை என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது.குண்டு வைத்து பொதுச் சொத்துக்களை நாசமாக்குவதை இந்த இயக்கத்தினர் வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

இக்கும்பலின் சதித்திட்டம் பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்து, தனிப்படை ஒன்று தீவிர தேடலில் ஈடுபட்டது. இதில்கருணாகரன் என்ற தீவிரவாதி பிடிபட்டார். டிரான்ஸ்பார்மர் ஒன்றை குண்டு வைத்து தகர்ப்பதற்காக அவர்வெடிகுண்டுடன் இருந்தபோது போலீசார் அவரைப் பிடித்தனர்.

அவரிடமிருந்து 5 டெட்டனேட்டர்கள், 5 ஜெலட்டின் குச்சிகள், 20 மீட்டர் மின்சார வயர் கைப்பற்றப்பட்டன.

பெரம்பலூர் அருகே செந்துறை பீலகுறிச்சியை சேர்ந்தவர் கருணாகரன். அவரிடம் நடத்திய விசாரணைக்குபின்னர் மாரிமுத்து என்ற முரளி, சண்முகசுந்தரம், வெள்ளையன் என்ற நடராஜன், கார்கமலன் ஆகிய நான்குதீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்தும் வெடி குண்டுகள் பறிமுதல் செயயப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X