For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

"எல்லையில் வாலாட்டுவதை நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு

குவைத்:

இந்திய எல்லைப்பகுதியில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுவதை நிறுத்தும் வரையில் பாகிஸ்தானுடன் பேச்சு என்ற பேச்சுக்கேஇடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அஜித் குமார் பாஞ்சா நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக குவைத் சென்றுள்ளார். அங்கு இந்திய தூதர்பிரபு தயாளின் இல்லத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடந்தது. அங்கு கூடியிருந்த இந்தியர்களிடம் அவர் பேசுகையில், இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதத்தைத் தூண்டி விடுகிறது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை அவர்களுடன்பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.

பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இல்லை. காஷ்மீர் பிரச்சனையில்பாகிஸ்தானிடம் சரணடைய இந்தியா விரும்பவில்லை. ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தினால். காஷ்மீர் குறித்துப் பேசத்தயாராக இருக்கிறோம். அதே போல, கராச்சி குறித்தும் பேச்சு நடத்தத் தயாராகவுள்ளோம்.

இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறையில் துரிதமான, மிக வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்குக் காரணமாக உள்ளஇளம் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள்.

செப்டம்பரில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் போது ஆயிரக்கணக்கில் இந்திய சாப்ட்வேர்என்ஜீனியர்கள் தேவைப்படுவார்கள். எனவே இதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா மட்டுமின்றி, சாப்ட்வேர் என்ஜீனியர் பற்றாக்குறையில் இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி போன்றநாடுகளுக்கும் இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X