தமிழகத்தில் இன்று
89 ஆண்டுகளுக்கு முன் "காணாமல் போன கோள் கண்டுபிடிப்பு
ஹீடல்பர்க் (ஜெர்மனி):
89 ஆண்டுகளுக்கு முன்பு "காணாமல் போன சிறிய கோள், மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது விஞ்ஞானிகள் வான்வெளியில் கோள்களைக் கண்டுபிடிப்பார்கள். அவற்றிற்கு கண்டுபிடித்தவரின் பெயரே இடப்படும். இப்படிக்கண்டுபிடிக்கப்படும் கோள்களை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.
இதுபோல கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோள் 89 வருடங்களுக்கு முன்பு அதாவது 1911-ம் ஆண்டு "காணாமல் போய் விட்டது. அந்தக் கோள் மீண்டும்இப்போது "கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போய் திரும்பி வந்த அந்தக் கோளுக்குப் பெயர் "719 ஆல்பர்ட். இதுகுறித்து ஜெர்மனியைச் சேர்ந்த விண்வெளியியல் பத்திரிகையான ஸ்ட்ரீன்அன்ட் வெல்ட்ரம் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மே 1-ம் தேதி ஆல்பர்ட் கண்டுபிடிக்கப்பட்டது. அரிசோனா மாநிலத்திலுள்ள கிட் மலை மீது உள்ள தொலைநோக்கி மூலம் இந்தக் கோள்பார்க்கப்பட்டது. முதல் முறையாக 1911-ம் ஆண்டு இது பார்க்கப்பட்டது. அதன் பிறகு காண முடியவில்லை.
மேலும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 14,788 சிறிய மற்றும் நடுத்தர கோள்கள் "பத்திரமாக இருப்பதாகவும் அந்தப் பத்திரிகையில் செய்திவெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications