தமிழகத்தில் இன்று
புலிகள் சாவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி:
ஒரிஸ்ஸா மாநிலம் நந்தன்கனான் விலங்கியல் பூங்காவில் 12 புலிகள் இறந்தது குறித்து ஆராயநியமிக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துமூன்று வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனவிலங்குகள் துறை கூடுதல் ஐ.ஜி. எஸ்.சி.சர்மாவின் அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நவீன் ரஹேஜா என்பவர் தாக்கல் செய்திருந்த பொது நலன் மனுவை விசாரித்த தலைமை நீதிபதிஏ.எஸ்.ஆனந்த், நீதிபதி லஹோத்தி, நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தஉத்தரவை திங்கள்கிழமை பிறப்பித்தது.
நவீன் ரஹேஜா தனது மனுவில், மீதமுள்ள புலிகளையும் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், நந்தன்கனான் விஷயம் மிகவும் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.காடுகளில் உள்ள புலிகள் மட்டுமல்லாது, வனவிலங்கு பூங்காக்களில் உள்ள புலிகள் நலன் குறித்தும்நாம் கவலைப்பட வேண்டும்.
காடுகளில் புலிகள் இறந்தால் பெரிய விஷயமாகப் படாது. ஆனால் பாதுகாப்பான இடத்தில்வைக்கப்பட்டுள்ள புலிகள் இறப்பது மிகவும் மோசமானது. அதிர்ச்சியளிப்பது. 1984-ம் ஆண்டு முதல்இதுவரை இறந்த புலிகள் குறித்த பட்டியலை தனியார் தொலைக் காட்சி ஒன்று சமீபத்தில் ஒளிபரப்பியது.இது மிகவும் கவலை தருவதாக உள்ளது.
அலட்சியப் போக்கு காரணமாக இந்தப் புலிகள் இறந்திருந்தால், அதற்குக் காரணமானவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.