For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

சந்திரிகா, விக்கிரமசிங்கே ஒப்பந்தத்தை நிராகரித்தது டி.யூ.எல்.எப்.

கொழும்பு:

இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அதிபர் குமாரதுங்காவுக்கும், எதிர்கட்சித் தலைவர் ரனில்விக்ரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை தமிழக ஐக்கிய விடுதலை முன்னணி நிராகரித்தது.

வடகிழக்கு மாகாண இடைக்கால கவுன்சில் அமைப்பது தொடர்பாக இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஒப்பந்தம்கையெழுத்தானது.

தமிழர்கள் அதிகம் வாழும் வட கிழக்கு மாகாணப் பகுதிகளில் இடைக்கால கவுன்சில் அமைப்பது, அதிகாரப்பகிர்வு உள்பட பல்வேறு திட்டங்கள் இதில் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில் தமிழர் கட்சிகளுடன் திங்கள்கிழமை முதல் அதிபர் சந்திரிகா ஆலோசனை நடத்தத்துவங்கியுள்ளார். முதலில் தமிழர் ஐக்கிய முன்னணிக் கட்சிப் பிரதிநிதிகள் அதிபருடன் பேச்சு நடத்தினர். இதன்படிஅதிபரின் வீட்டில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் சம்பத்நாதன், மூத்த துணைத் தலைவர்அனந்தசங்கரி, எம்.பி.பரராஜசிங்கம் ஆகியோர் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை திங்கள்கிழமை சந்தித்தனர்.

சந்திப்பின் போது நீதித்துறை துணை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பியாரிஸ், அமைச்சர்கள் இன்டிகாகுணவர்த்தனே, பட்டி வீரக்கூன் ஆகியோரும் உடனிருந்தனர்.

சந்திப்பு குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி துணைத் தலைவர் அனந்த சங்கரி கூறுகையில், வடகிழக்குமாகாணத்தில் இடைக்கால கவுன்சில் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்தஒப்பந்தப்படி தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிகாரப் பரவல் இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.

இடைக்கால கவுன்சில் அமைப்பதன் மூலம் அதிகாரப்பரவல் ஏற்பட்டு விடும் என்று அவர்கள் கூறுவது சரியல்ல.அரசு விடுதலைப்புலிகளை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் இலங்கைபோர் முடிவுக்கு வரும் என்றும் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X